web log free
September 19, 2024

கணவரின் தலையை பந்தாடிய மனைவி!

திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் கிரிக்கெட் மட்டையால் (Bat) கணவனின் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதுடைய மனைவி திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.