web log free
February 07, 2026

வைத்தியருக்கு எதிராக 15 முறைப்பாடுகள்

கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியருக்கு எதிராக இன்றைய தினம் மேலும் 10 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதற்கமைய குறித்த வைத்தியருக்கு எதிராக இதுவரையில் 15 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவற்றுள் 5 முறைப்பாடுகள் நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டிருந்தன.

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில், சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி கடந்த 24ஆம் திகதி குருநாகலில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd