web log free
May 09, 2025

பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தால் அவர் வகித்து வந்த பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதன்படி வெற்றிடமான பசறை ஆசனத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆசன அமைப்பாளர் பதவி லெட்சுமணன் சஞ்சய்க்கு வழங்கப்பட்டுள்ளது. 

கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து உரிய நியமனக் கடிதத்தை சஞ்சய் பெற்றுக்கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், குறித்த பதவிக்கு தாம் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், பசறை இளைஞர்களுக்கு சேவையாற்றுவேன் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd