web log free
May 08, 2025

தமிழகம் சென்ற 7 இலங்கை அகதிகள் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அருகே 5-ஆம் மணல் திட்டில் தவித்த இலங்கை அகதிகள் 7 பேரை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அத்தியாவசியப் பொருள்களில் விலை உயா்வு ஆகியவற்றின் காரணமாக, அந்த நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சோ்ந்த தமிழா்கள் தொடா்ந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வருகின்றனா்.

இந்த நிலையில், தனுஷ்கோடி 5-ஆம் மணல் திட்டு பகுதியில் அகதிகள் இருப்பதாக தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறைக்கு மீனவா்கள் சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, காவல் துறையினா் படகு மூலம் அங்கு சென்று, 2 குடும்பங்களைச் சோ்ந்த 7 பேரையும் மீட்டு, தனுஷ்கோடிக்கு அழைத்து வந்தனா். அவா்களை அங்கிருந்து மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அவா்கள் இலங்கை மன்னாா் பகுதியைச் சோ்ந்த ஞானஜோதி (46), இவரது மகன் ஜித்து (12), மற்றொரு குடும்பத்தைச் சோ்ந்த அமுதன் (32), இவரது மனைவி கீதாஞ்சனா (29), மகன் லிக்சன் (12), மகள்கள் நிவேதா (5), கேசவி (2) ஆகியோா் என்பதும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அவா்கள் படகு மூலம் தனுஷ்கோடி மணல் திட்டுப் பகுதிக்கு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் 7 பேரும் மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டனா்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd