web log free
April 19, 2024

பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, பயங்கரவாத சவாலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து, தூதுவர்களுக்கு ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜேர்மன், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.