web log free
March 23, 2026

மைத்திரியின் பேச்சுக்கு மதிப்பில்லை

பாராளுமன்றத்தில் இன்று (11) மீண்டும் விவாதிக்கப்படவுள்ள வற் வரி சட்டமூலத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்க தீர்மானித்தமை அக்கட்சியின் அமைச்சர் பதவிகளை வகிக்கும் உறுப்பினர்களுக்கு சிக்கலாகியுள்ளது.

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதால் அரசாங்கம் கொண்டு வரும் சட்டமூலத்தை எதிர்க்க முடியாது எனவும் கட்சித் தலைமைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வற் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்பதை அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த சட்டமூலத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd