web log free
February 01, 2026

அரச ஊழியர்கள் இன்று முன்னெடுக்கும் திட்டம்

நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று (12) அமுல்படுத்தவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தெரிவிக்கின்றன.

இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அதன் அழைப்பாளர் சந்தன சூரியஆராச்சி இதனை தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளத்துக்கான குறைந்தபட்ச கொடுப்பனவான 20,000 ரூபாவை கோரி இந்த தொழில் நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் மேலும் தெரிவிக்கின்றது.

மேலும், டிசம்பர் 13ம் திகதி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், ஒரே நாளில் சுகயீன விடுப்பு அறிக்கையை முடித்துக் கொள்ள மாட்டோம் என தொழிற்சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd