web log free
September 21, 2024

அலரி மாளிகையில் நடந்த 18% வெற்றி விருந்து

சரக்கு மற்றும் சேவை வரியை 18% ஆக உயர்த்தியதை ஏற்று கொண்டாடும் வகையில் நேற்று முன்தினம் (11) இரவு அலரி மாளிகையில் விருந்து நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதமர் நடத்திய விருந்தில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் பெருமளவான அமைச்சர்கள் கலந்துகொண்டதாக அவர் நேற்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சீரழிக்கும் வற் வரி அதிகரிப்பு நிறைவேற்றப்பட்டமை அங்கு கொண்டாடப்பட்டது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வற் அதிகரிக்கும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினரும் கூட விருந்தில் கலந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். 

Last modified on Wednesday, 13 December 2023 06:14