web log free
January 26, 2026

அநுர குறித்து தேரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க அண்மையில் தனது ஆலயத்திற்கு வருகை தந்ததாக மிஹிந்தலை விகாரையின் தலைவர் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அப்போது, பீரித் நூல் கட்டி, நாட்டை நன்றாக ஆள வேண்டும் என்று ஆசிர்வதித்து, உபதேசம் செய்ததாக தேரர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், விகாரையை விட்டு வெளியில் வந்த அநுர திஸாநாயக்க பிரித் நூலை அவிழ்த்து முற்றத்தில் வீசியதாக தம்மரதன தேரர் தகவல் வெளிப்படுத்தியுள்ளார்.

அதைப் பார்த்த மாணவர்களும், சாரதியும் நடந்த சம்பவத்தை தன்னிடம், “இவர்கள் ஏமாற்றுகாரர்கள். அவர்களுக்கு மதம் கிடையாது. கவலைப்படாதீர்கள்’ என்று கூறியதாக தம்மரதன தேரர் மேலும் குறிப்பிடுகிறார்.

யூடியூப் சேனலுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது தேரர் இவ்வாறு கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd