web log free
February 01, 2026

உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான (2023) கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 04ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அனுமதி அட்டைகள்  மற்றும் நேர தாள்கள் பாடசாலைகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தச் சீட்டுகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள் www.doenets.lk என்ற இணையத்தளத்திலிருந்து அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தை ஒரு தடவை மாத்திரமே திருத்திக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 19 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd