web log free
January 31, 2026

நாளை டெங்கு ஒழிப்பு விசேட திட்டம்

நாளை(18) முதல் 05 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

பருவப்பெயர்ச்சி மழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கு , கிழக்கு, மேல், தென், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் இந்த விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நாளை(18) மற்றும் நாளை மறுதினம்(19) விசேட பூச்சியியல் ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 82036 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வருடத்தில் 49 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd