web log free
September 21, 2024

தம்மிக்க தொடர்பான செய்தியை நிராகரிக்கும் மொட்டு கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரபல வர்த்தகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கட்சி என்ற ரீதியில் இவ்வாறானதொரு தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என பெரமுன கூறுகின்றது. 

அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டால், நிறைவேற்று சபையை கூட்ட வேண்டும் எனவும், கடந்த சனிக்கிழமையின் பின்னர் நிறைவேற்று சபை கூடவில்லை எனவும் மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள் குறிப்பிடுகின்றனர்.