web log free
September 21, 2024

ஜனாதிபதி வேட்பாளர், தனது நிலைப்பாட்டை அறிவித்தார் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கான ஆதரவை வழங்குமாறு அனைத்து அமைச்சர்களிடமும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளதாக மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.