web log free
March 16, 2026

நிரம்புகிறது காசல்ரீ நீர்த்தேக்கம்

காசல்ரி நீர்தேக்க பகுதிகளில் (18ஆம் திகதி) பெய்த கடும் மழையுடன், காசல்ரி நீர்த்தேக்கம் (19ஆம் திகதி) நிரம்ப ஆரம்பித்துள்ளதாகவும், அதற்கமைவாக களனிகாவின் நீர்மட்டம் சிறிதளவு அதிகரித்துள்ளதாகவும் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நிரம்பி வழிவதைத் தொடர்ந்து விமலசுரேந்திர, லக்ஷபான, நியூ லக்ஷபான, கனியன் மற்றும் பொல்பிட்டிய ஆகிய நீர்மின் நிலையங்கள் அதிகபட்ச கொள்ளளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என மின் உற்பத்தி நிலையங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd