web log free
September 21, 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் புதிய சிலருக்கு பதவிகள்

சுதந்திர மக்கள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் தொகுதிகள் வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, நாலக கொடஹேவாவுக்கு கம்பஹா மாவட்டத்திலும், டிலான் பெரேராவுக்கு பதுளை மாவட்டத்திலும், வசந்த யாப்பா பண்டாரவுக்கு கண்டி மாவட்டத்திலும் தொகுதி அமைப்பாளர்கள் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. எல். பீரிஸுக்கும் கட்சியில் பதவி வழங்கப்படவுள்ளது.