web log free
February 13, 2026

கெஹலியவின் வீட்டுக்கே சென்ற சிஐடி

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

நாட்டிற்கு தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று காலை கொழும்பிலுள்ள அமைச்சரின் இல்லத்திற்குச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd