web log free
April 23, 2025

யாழ் தீ விபத்தில் நுவரெலியாவை சேர்ந்த இருவர் பலி

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில்  இருவர் உயிரிழந்துள்ளனர்.

இத்தீ விபத்து இன்று (02) அதிகாலை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான நபரும்,  வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.

தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd