web log free
July 13, 2025

பஸ் கட்டணம் அதிகரிக்காது

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் தனியார் பஸ் கட்டணம் சற்றும் அதிகரிக்காது என மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் டபிள்யூ. பிரசன்ன சஞ்சீவ தெரிவித்தார்.

நடத்துனர்கள் அதிக கட்டணம் வசூலித்தால், பேருந்து தொடர்பில் 0112-860860 என்ற எண்ணில் போக்குவரத்து அதிகாரசபையின் புகார் திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறும் தலைவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், பேருந்து நடத்துனர்கள் செல்லும் இடம் தொடர்பான பயணச்சீட்டை வழங்காவிட்டால், பணம் செலுத்தாமல் பேருந்தில் பயணிக்குமாறும் தலைவர் பயணிகளை கேட்டுக்கொள்கிறார்.

பேரூந்துகளில் பணியாளர்கள் மிகவும் அநாகரீகமாக திட்டினால், மிகவும் கவனக்குறைவாக பேருந்துகளை ஓட்டினால், மீதி பணத்தை தராவிட்டால், அதிக கட்டணம் வசூலித்தால், உடனடியாக புகார் தெரிவிக்குமாறும் தலைவர் கேட்டுக்கொள்கிறார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd