web log free
April 22, 2025

செங்கடல் களத்தில் இறங்க இலங்கை கடற்படை தயார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய செங்கடல் மற்றும் அதனை அண்மித்த பிராந்தியத்திற்கு இலங்கை கடற்படையின் கப்பல்களை அனுப்பிவைக்க தயார் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த கப்பல்கள் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் Prosperity Guardian நடவடிக்கையில் இணைக்கப்படவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

கப்பலை அனுப்பிவைக்க வேண்டிய திகதி தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

செங்கடலை அண்மித்த அரபுக்கடல், கல்ஃப் கடல் உள்ளிட்ட பிராந்தியம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் Prosperity Guardian நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd