web log free
March 12, 2026

கடுமையாக மோதிக் கொண்ட இரு மொட்டு கட்சி எம்பிக்கள்

கடந்த வாரம் நெலும் மாவத்தை மொட்டுக் கட்சி காரியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இடையே தகாத வார்த்தை மோதல் ஏற்பட்டு சண்டையில் இருந்து தப்பியது.

குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் எனவும் அவர்களில் ஒருவர் கட்சியின் உயர் பதவியில் இருப்பவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“கட்சிக்கு என்ன செய்தீர்கள்?” என்று ஒரு எம்.பி.யும், “நீ அதைச் செய்தாயா இல்லையா?” என்று மற்றொரு எம்.பியும் கேள்வி எழுப்பிக் கொண்டனர். 

அத்தோடு நிற்காத எம்.பி.க்கள் பலத்த வாய் வார்த்தை மோதலுக்கு மத்தியில் உரத்த குரலில் திட்டிக் கொண்டதாக அறியமுடிகின்றது.

அப்போது கட்சி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் குழு வந்து இரண்டு எம்.பி.க்களையும் பிரித்து மோதலை சமரசம் செய்தனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd