web log free
January 26, 2026

கட்சித் தாவிய நபர்களுக்கு ஆசன ஒதுக்கீட்டில் குழப்பம்

கட்சித் தாவிய எம்.பி.க்கள் எவரினதும் பாராளுமன்ற ஆசனங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என பாராளுமன்ற பிரதம படைக்களச்சேவிதர் நரேன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் அரசியல் ரீதியில் தீர்மானம் எடுத்திருப்பதால், உரிய குழுவுக்கு ஆசனங்களை ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கூற வேண்டும் என்றும் அதன் பின்னரே சபாநாயகர் அது குறித்து அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

ஆனால், இதுவரை கட்சித் தாவியதாக கூறப்படும் எம்.பி.க்கள் எவரிடமிருந்தும் அத்தகைய கோரிக்கை வரவில்லை என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd