web log free
April 22, 2025

சஜித் அணி எடுத்துள்ள திடீர் முடிவு

பொஹொட்டுவ பாராளுமன்ற உறுப்பினர்களை சமகி ஜன பலவேகவுடன் இணைக்கும் வேலைத்திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள சஜித் அணி எம்.பி.க்களில் பலர் இந்தச் செயல்முறைக்கு எதிரானவர்கள்.

இதனைத் தடுத்து நிறுத்தாவிட்டால் எம்.பி.க்கள் குழுவொன்று பாராளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி முரண்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு கட்சி தலைமை தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd