web log free
May 10, 2025

' உடனடி தேசப்பாற்றாளர்கள் உருவாகியுள்ளனர்'

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து, நாட்டில் உடனடி தேசப்பாற்றாளர்கள் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறிய மஹிந்தானந்த அலுத்கமகே, கடந்த நான்கரை வருடங்களாக தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியவர்கள் இன்று தேசப்பற்றாளர்களாக தம்மை வெளிப்படுத்த முனைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான அரசியல்வாதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மகாநாயக்க தேரர்கள் மற்றும் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd