web log free
July 01, 2025

ஜனாதிபதி வேட்பாளராக நாமலை முன்னிறுத்த முயற்சி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக முன்னிறுத்துமாறு பொஹொட்டுவ தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராம மட்டத்தில் உள்ள கட்சி செயற்பாட்டாளர்கள் விருப்பத்தின் பேரில் இந்த கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

பொஹொட்டுவவில் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா முன்னிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையினால் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பும் என பொஹொட்டுவவை சேர்ந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தம்மிக்க பெரேரா முன்வந்தால் எதிர்க்கட்சிகள் வலுவடையும் என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், பொஹொட்டுவ தலைவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பொஹொட்டுவவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக தம்மிக்க பெரேராவை முன்னிறுத்துவதற்கு கட்சி கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்கவில்லை என மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd