web log free
April 22, 2025

ரணிலே சிறந்த தெரிவு, புது ஜனாதிபதி வந்தால் நாடு நாசம்

அனுபவமற்ற ஜனாதிபதியை நியமித்து நாட்டை மீண்டும் ஆபத்தில் தள்ள முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தனிப்பட்ட முறையில் தாம் நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

இன்று (18) மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொஹொட்டுவவில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என அறிவித்துள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்ததுடன், அதற்கு பதிலளித்த பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனு தொடர்பில் தம்மிக்க பெரேராவுடன் பொஹொட்டுவா உடன்படிக்கைக்கு வரவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd