web log free
April 28, 2024

துப்பாக்கிச் சூட்டுப் பயங்கரம், ஐவர் ஓரே இடத்தில் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

டிஃபென்டர் ரக வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வண்டியில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

நெடுஞ்சாலை நுழைவு வாயில் அருகே உள்ள  பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இறந்தவர்களின் சடலங்கள் வாகனத்திலும் வெளியேயும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.