web log free
September 06, 2025

ஜேவிபி கட்சி தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பிரதான வேலைத்திட்டமா என கேள்வி எழுப்பி 22ஆம் திகதி பிற்பகல் ஜனதா விமுக்தி பெரமுனவின் பெலவத்தை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக புதிய ஜனதா பெரமுன கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேசிய மக்கள் படையின் செயற்குழு உறுப்பினர்  சமன்மலி குணசிங்க அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் விபச்சாரத்தை தமது அரசாங்கத்தின் கீழ் சட்டப்பூர்வமாக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

விபச்சாரத்திற்கு விதி முறைகள் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

வருங்கால ஜனாதிபதியை உருவாக்க முயலும் கட்சியின் பிரதிநிதிகள் இப்படியான முட்டாள்தனமான அறிக்கைகளை வெளியிடுவதன் அர்த்தம் என்ன என்று கேட்கும் பதாகை கண்காட்சியும் இங்கு நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 70 வீதத்துக்கும் அதிகமான பௌத்தர்கள் வாழும் நாட்டில் வெளியிடும் கருத்துக்களுக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுவதாக புதிய ஜனதா பெரமுன தெரிவித்துள்ளது.

ஜனதா விமுக்தி பெரமுனவின் அலுவலகத்திற்கு முன்பாக இவ்வாறானதொரு போராட்டம் முன்னெடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்பதும் விசேட அம்சமாகும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd