web log free
December 16, 2025

விகாரைக்குள் நுழைந்த குழுவினால் தேரர் சுட்டுக் கொலை

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு காரில் வந்த இனந்தெரியாத நால்வர் தேரர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தேரர்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

காரில் வந்த நான்கு சந்தேக நபர்கள் T-56 போன்ற துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd