web log free
April 22, 2025

பொய் கூறும் ரஞ்சன் ஜெயலாலை விசாரிக்க வேண்டும்

பாராளுமன்றம் ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக மின்சார கட்டணத்தை செலுத்தி வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் ஏழு கோடி மின்கட்டணத்தைச் செலுத்தத் தவறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகமும் எவ்வித பாக்கியும் இன்றி மின்சார கட்டணத்தை செலுத்தியுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் அனைவருக்கும் அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ரஞ்சன் ஜெயலால் என்ற நபரை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd