web log free
April 28, 2024

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபருக்கு நீதிமன்றம் அழைப்பு

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவை எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணையில் போது நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் நேற்று காலை சமன் பெரேரா உட்பட ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் அவரது மரணம் தொடர்பான அறிக்கைகள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படாததன் அடிப்படையில் அவருக்கு எதிராக நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.