web log free
July 02, 2025

பெலியத்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

பெலியஅத்த பிரதேசத்தில் 5 பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்களை கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் உட்பட பல தரப்பினரின் உதவி பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மேலதிகமாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் உதவவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd