web log free
April 27, 2024

ஞாயிறு அன்று சொந்த ஊரில் இறுதிக் கிரியை

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைகளை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று மாலை 5.30 மணியளவில் பொரளை ஜயரத்ன மல்சாலைக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டு நாளை (26) காலை 10.30 மணியளவில் புத்தளத்தில் உள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்று (25) காலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர்.