web log free
April 22, 2025

வீட்டுத் தோட்ட விவசாயம் ஊக்குவிப்பு

விவசாய திணைக்களம், விவசாய சேவைகள் திணைக்களம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சு இணைந்து வீட்டு தோட்ட  விவசாய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளன.

இராஜாங்க கால்நடை மேம்பாட்டுத் துறை அமைச்சர் டி. பி.ஹேரத் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு மற்றும் பயிர்களின் நஷ்டத்திற்கு தீர்வாக இது முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நாட்களில் விதை பொதிகள் விநியோகிக்கப்படுவதாக கூறினார். 

ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஏற்ற மரக்கறிகள் பயிரிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே ஈர வலயத்தில் விவசாயம் செய்யப்படாத வயல் நிலங்களில் மற்ற பயிர்களை பயிரிட அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விவசாய சேவைகள் திணைக்களம் எதிர்காலத்தில் மக்களுக்கு அறிவிக்கவுள்ளது.

எதிர்காலத்தில் அதற்கான முன் அனுமதி வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி தெரிவித்தார்.

நாட்டில் 84,000 ஹெக்டேர் சாகுபடி செய்யப்படாத நெல் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. 

ஈர வலயத்திலுள்ள பல நெற்களஞ்சியங்கள் நீடிக்க முடியாத நிலையில் காணப்படுவதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd