web log free
September 20, 2024

அரச நிறைவேற்று அதிகாரிகள் சுகயீன விடுமுறை

அரசு நிர்வாக நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழுவால் சிறப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தங்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்குவதற்கும் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் இன்று (29) சுகயீன விடுமுறையை அறிவிக்கவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க அதிகாரிகளை பாதிக்கும் சம்பள முரண்பாடு மற்றும் தெரிவு செய்யப்பட்ட துறைகளுக்கு மாத்திரம் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதால் ஏற்படும் அநீதி ஆகியவற்றின் அடிப்படையில் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.

இதேவேளை, கொழும்பில் இன்று (29) எதிர்ப்புக் கூட்டமொன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.