web log free
April 22, 2025

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய ஊடகப் பணிப்பாளராக பிரபாத் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய ஊடகப் பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரபாத் மாதரகேவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

தற்போது மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பணிப்பாளராக பிரபாத் மாதரகே கடமையாற்றி வருகின்றார்.

ஏசியன் மிரர் இணையத்தளத்தில் செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மீடியா செயற்பாடுகள் மற்றும் இணைய ஆசிரியராக பணியாற்றிய அவர் ஜனாதிபதி அலுவலகம் உட்பட பல தனியார் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில் பதவிகளை வகித்து அனுபவம் வாய்ந்த மற்றும் முதிர்ந்த ஊடக நிர்வாகியாவார்.

பிரபாத் மாதரகே கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை முடித்து கணனி விஞ்ஞானம் மற்றும் இலத்திரனியல் ஊடக முகாமைத்துவத்தில் டிப்ளோமா பெற்றுள்ளார்.

இவர் ஹோமாகம மகா வித்தியாலயம், ஹோமாகம மத்திய மகா வித்தியாலயம் மற்றும் ஹொரணை றோயல் வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd