web log free
June 14, 2025

பொலிஸ், பொது மக்கள் இரு தரப்பினருக்கும் பாதிப்பு

இன்றைய கொழும்பு  போராட்டத்தில் சில பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் காயம் ஏற்பட்டதை பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவா உறுதிப்படுத்தினார்.

அதேவேளை சமகி ஜன பலவேகய (SJB) கட்சியினரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

"சம்பவத்தில் சில பொலிசார் காயமடைந்தனர், ஆனால் நான் இன்னும் அறிக்கையைப் பெறுகிறேன்," என்று தல்துவ கூறினார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட ஐந்து கட்சி ஆதரவாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எனினும் எந்தவொரு அரசியல்வாதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனாலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலரை சஜித் நேரில் சென்று பார்வையிட்டார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd