web log free
June 14, 2025

ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்படும் கொழும்பு வீதிகள்

மாநகர பொறியியல் திணைக்களத்தினால் நிலத்தடி குழாய்கள் அமைக்கும் பணியின் காரணமாக இன்று (05) முதல் மார்ச் (11) வரை பல வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள நவம் மாவத்தை மற்றும் கொம்பனிவீதி பொலிஸ் பிரிவுகள் நாளை முதல் மூடப்படவுள்ளன.

உத்தரானந்த மாவத்தையின் நவம் மாவத்தையிலிருந்து புகையிரத கடவை வரையிலான பகுதி இன்று (05) முதல் எதிர்வரும் (19) வரை மூடப்படவுள்ளது.

உத்தரானந்த மாவத்தை பெரஹெர மாவத்தையிலிருந்து நவம் மாவத்தை வரையிலான பகுதி எதிர்வரும் (20ஆம் திகதி) முதல் மார்ச் மாதம் (04ஆம் திகதி) வரை மூடப்படும்.

மார்ச் (05) முதல் மார்ச் (11) வரை உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை, ரொட்டுண்டா கார்டன் சந்தி மூடப்படும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd