web log free
May 03, 2024

அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 9,434 முறைப்பாடுகள் கடந்த 2023 ஜனவரி (01) முதல் டிசம்பர் (31) வரை கிடைக்கப்பெற்றுள்ளதாக சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

அவற்றில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 472 முறைப்பாடுகள், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 404 முறைப்பாடுகள், மிருகத்தனம் தொடர்பான 2242 முறைப்பாடுகள், சிறுமிகளை கற்பழிப்பு தொடர்பான 51 முறைப்பாடுகள் மற்றும் சிறுவர்களை ஆபாசமான செயல்களில் பயன்படுத்தியமை தொடர்பான 06 முறைப்பாடுகள் உள்ளன.

போதைப்பொருள் கடத்தலுக்கு குழந்தைகளை பயன்படுத்துதல், தொழிலாளர்களாக பயன்படுத்துதல், குடும்ப வன்முறையால் ஒடுக்குதல், புறக்கணிப்பு, கடத்தல், காயப்படுத்துதல், குழந்தைகளை விற்பனை செய்தல், பாடசாலை கல்வி வழங்காமை போன்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தலைவர் குறிப்பிடுகின்றார்.

குறித்த முறைப்பாடுகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க தற்போதுள்ள சில சட்டங்களை திருத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.