web log free
April 22, 2025

தேசிய அரசாங்கம் குறித்து ரணில் தலைமையில் இரகசிய பேச்சு!

புதிதாக இணையவுள்ள எதிர் கட்சி எம்பிக்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பிலும் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலும் கடந்த வாரம் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது வெற்றியடையும் பட்சத்தில் தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான கலந்துரையாடலில் சமகி ஜன பலவேகவின் சிரேஷ்ட பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டுள்ளதுடன், அரசாங்க தரப்பில் இருந்தும் பல பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, இக்கலந்துரையாடலில், தேசிய அரசாங்கத்தின் அமைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், அதனை விரைவில் முடிப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd