web log free
January 25, 2026

சுகாதார துறை ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்த தயாராகும் வைத்தியர்

எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

ஏசியன் மிரர் “புதிய பாதை” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலின் போது, மருத்துவமனை ஊழியர்கள், தொழிற்சங்க ஆர்வலர்கள் மற்றும் அரசியல் அடியாட்களின் நடவடிக்கைகளால் தான் தாக்கப்படுவதாக மருத்துவர் கூறினார்.

எக்காரணம் கொண்டும் மக்களுக்கு நற்பணிகளை தொடர்ந்து செய்வேன் எனவும் ஓய்வு பெற்றால் சுகாதாரத்துறையில் இடம்பெற்று வரும் பல மோசடிகள் ஊழல்களை அம்பலப்படுத்துவேன் எனவும் அந்த நிகழ்ச்சியில் மேலும் கருத்து தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd