web log free
April 27, 2024

தேஷபந்துவே தனது தெரிவு - அமைச்சர் டிரான்

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை நியமிப்பதே தமது விருப்பம் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள பதில் பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மற்றும் நிரந்தர பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது:

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேஷ்பந்து தென்னகோன் நியமிக்கப்படுவதை நான் பார்க்க விரும்புகிறேன். அதில் பிரச்சனை இல்லை. அரசு தரப்பில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அரசியல் நிர்ணய சபை உள்ளது. அவர்கள் வித்தியாசமாக வேலை செய்கிறார்கள். இந்த நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை அந்த மக்கள் அனைவரும் அனுமதித்தால் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட வேண்டும்' என்றும் அமைச்சர் கூறினார்.