web log free
January 26, 2026

இந்திய உயர்ஸ்தானிகருடன் சம்பிக்க சந்திப்பு

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (22) இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஸ் ஜாவை சந்தித்தார்.

ஐக்கிய குடியரசு முன்னணியின் ‘எங்கள் தேசத்துக்காக ஒருமைப்பாட்டுடன் ஒரு படி முன்னோக்கிச் செல்வது’ என்ற கையேட்டை உயர்ஸ்தானிகரிடம் வழங்கிய பின்னர் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

ஐக்கிய குடியரசு முன்னணியின் தவிசாளரும், விசேட நிபுணருமான கலாநிதி அஜித் அமரசிங்க மற்றும் சர்வதேச உறவுகளின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் ரோஹன மஹலியனாராச்சி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd