web log free
April 28, 2024

நாடு முழுவதும் 50,000 போலி வைத்தியர்கள்

நாடு முழுவதும் சுமார் 50,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

அதனை ஒழுங்குபடுத்த சுகாதார அமைச்சு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அங்கு பேசிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் டொக்டர் பிரசாத் ஹேரத், பிரதான கிராமங்களுக்கு அருகில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் தோராயமாக மூன்று முதல் நான்கு போலி வைத்தியர்கள் உள்ளனர்.

சில மருந்துக் கடைகளின் செயற்பாடுகளும் சுகாதாரத் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்குவதால் நோயாளிகள் உயிரிழக்க கூட வாய்ப்புள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக முறையான ஒழுங்குமுறை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் வலியுறுத்துகிறது.