web log free
April 27, 2024

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் விற்பனைக்கு இல்லை

நாட்டின் பிரதான பொருளாதார மையமாக விளங்கும் தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி பொய்யான செய்தி என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை வர்த்தக சங்க அதிகாரிகளுடன்  இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலின் போது விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தச் செய்தி தொடர்பில் கேட்டறிந்தார்.

பொருளாதார நிலையங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கத்திடம் எந்த ஆயத்தமும் இல்லை என விவசாய அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

எனவே இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.