web log free
April 22, 2025

உத்திகவின் இடத்திற்கு முத்துகுமாரன

உத்திக பிரேமரத்ன பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததால் அந்த வெற்றிடத்திற்கு முத்துக்குமாரனை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்ட பொதுஜன பெரமுனவின் பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர் முத்துக்குமாரன அடுத்தபடியாக விருப்பு வாக்கு பெற்றுள்ளார். 

உத்திக தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்துள்ளார்.

உத்திக பிரேமரத்ன கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பட்டியலில் போட்டியிட்டு தேசிய சுதந்திர முன்னணியின் ஒதுக்கீட்டின் கீழ் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd