web log free
December 27, 2025

நாளை சபையில் சில உண்மைகளை உடைக்கத் தயாராகும் சஜித்

பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்கு அரசியல் அமைப்பு சபை எவ்வாறு அங்கீகாரம் வழங்கியது என்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெளிவாக தோற்கடிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கூறுவது சட்டவிரோதமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கம் உன்னிப்பாக கவனம் செலுத்தும் என அக்கட்சியின் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இதேவேளை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நாளைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd