web log free
March 18, 2026

புதிய கூட்டணி மைத்திரியை புறக்கணிக்க இதுவே காரணம்

புதிய கூட்டணியுடன் இணைந்து பரந்துபட்ட கூட்டணியை அமைக்க எதிர்பார்த்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிமல் லான்சா தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தவிர்த்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிசேன தனது கருத்தை அவ்வப்போது மாற்றிக்கொள்வதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன ஐக்கிய பெரமுனவின் கீழ் பரந்துபட்ட கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள போதிலும், இந்த பிரேரணையை கருத்தில் கொள்ளாமல் முன்னாள் ஜனாதிபதி தனியான பயணத்தை மேற்கொள்வதாக புதிய கூட்டணியில் செயற்படும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் குற்றம் சுமத்தியுள்ளது. 

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் எதிர்கால விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடி இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளதாக அறியமுடிகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd