web log free
April 28, 2024

புதிய கூட்டணியில் இணைந்த மேலும் ஒரு மொட்டு பிரபலம்

மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் குணசிறி ஜயநாத் புதிய கூட்டணியில் இணைந்துள்ளார்.

அவர் அண்மையில் கூட்டமைப்பின் செயற்பாட்டுத் தலைவரான முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவையும் அதன் ஸ்தாபகரான நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவையும் சந்தித்து எதிர்கால நிகழ்ச்சி நிரல் குறித்து கலந்துரையாடியதாக ராஜகிரிய கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய கூட்டணியின் பியகம தொகுதி சபையை அவர் நேற்று தெல்கொடவில் உள்ள தனது வீட்டில் கூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ச குடும்பம் காரணமாக தமக்கு நேர்ந்த அரசியல் அநீதிகளையும் பொஹொட்டுவவின் தற்போதைய வேலைத்திட்டத்தையும் எம்.பி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க மற்றும் சிலர் கலந்துகொண்டனர்.