web log free
September 03, 2025

ஆங்கில மொழிக்கு முன்னுரிமை கொடுக்கும் ஜனாதிபதி

தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பை அமுல்படுத்துவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அதாவது புதிதாக 2500 ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

அவசர தேவை கருதி, மூன்று வருட ஒப்பந்த காலத்துக்கு ஆங்கில மொழி மூலம் பாடங்களை கற்பிக்கக்கூடிய தகுதி வாய்ந்த 1,000 ஓய்வுபெற்ற ஆசிரியர்களை உடனடியாக இணைத்துக்கொள்ளவும், இதற்கிடையில் திறந்த போட்டியின் மூலம் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கக்கூடிய 1,100 பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். 

மேலும், ஆங்கில வழிக் கல்வி வழங்கும் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்தவும் அவர் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டளவில் குறைந்தது 200,000 மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்குவதே தமது இலக்காகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd