web log free
April 22, 2025

ஹோட்டல் அறையில் பெண் கொலை, சந்தேகநபர் தற்கொலை!

பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததுடன் சந்தேக நபரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பொத்துவில் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகம்பே பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பெண் ஒருவர் நேற்று (12) படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர் மஹகளுகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர்.

உயிரிழந்த பெண் நபர் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்க வந்திருந்த நிலையில், அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த முகாமையாளர் அறுகம்பை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களுடன் அறையின் கதவை உடைத்து திறந்து பார்த்துள்ளார்.

குறித்த அறையில் பெண் ஒருவர் இரத்தத்துடன் சடலமாக காணப்பட்டதையும் சந்தேகநபர் அறையை அண்டிய குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd